| |
|
வாரீருய்விக்கும்மார்க்கம்
|
|
| மோஹன ராகம் ஆதி தாளம்
பல்லவி
வாரீருய்விக்கும்மார்கம் இதுவே மற்றறிவீர்
வாரீருய்விக்கு மார்க்கம்
அநுபல்லவி
வாரீர் பரந்தாமனைச் சேரீர் நல்லவழி இந்தப்
பாரில் வேறில்லையுள்ளம் தேரீர் நற்காலமிது [வா]
சரணங்கள்
ஆதிமூலமேயென்று ஆனை அழைத்தபோது
சோதி சொரூபமாய்வந் தாதரித்தாரிங்கே [வா]
விண்ணவர் பாலிடர் நண்ணாதடிக்கு மெங்கள்
அண்ணல் கோபாலனடி எண்ணாதார்க்கில்லைகதி [வா]
மைவண்ணன் நாமமல்லால் உய்பவர்க்கில்லைவேறு
பொய் மதங்களை நம்பி அய்யோ அலையாதீர் [வா]
பாசப ந்தங்களதை நாசமாய்ச் செய்திடும்
தோஷபோக்கியனுக்கு தாஸனாய் உய்மினீர் [வா]
பக்ஷிவாகனன்மேலே இச்சைவைத்தவர் கட்கே
இச்சகன்தனிலேயார் இச்சையிடாதவரும் [வா]
அண்டர் முனிவர்தொழும் புண்டரீகாக்ஷனை
தெண்டமிடாதோன் எம தண்டனைக்குள்ளாவான்[வா]
படங்களோராயிரமார்--குடைநிழலிலேயார்
நடனகோபாலனடிவிடாது பாடியாடுவோம் [வா]
|
|