| |
|
வாடி சகியே சற்றே
|
|
சுருட்டி ராகம் ரூபக தாளம்
கண்ணிகள்
வாடிசகியே சற்றே மனம்வைத்து நீபோடி
வாடி நீயென்தன் மனம் கூடிமகிழப்போடி [வா]
நினைக்கும்போதெல்லாம் என்னுடல் நெருப்பாயெரியுதே
மனக் கவலை தீராய்பாவாய் மையல் விரியுதே [வா]
உன்னைவிட யாரடியே யுதவிசெய்வோரையோ
முன்னூவினையிதுவடியே மொழிவது தான் பொய்யோ [வா]
சொல்லச்சொல்ல மறுமொழி சொல்லாமலிருக்கின்றாய்
செல்வச்சுவாமியைக்கண்டால் ஜென்மமீடேறுமென்றாய் [வா]
ஒருதுணையும் காணோமேடி யுதவிசெய்வாய் காவாய்
திருவடியே தஞ்சமல்லால் திக்குண்டோ சொல் பாவாய் [வா]
கண்டாலும் கலிதீருமடி கார்மேனியன்றனை
கொண்டாடுமன்பர்களைக் கொண்டாடும் கோவலன்றாளை [வா ]
எத்தவத்தையியற்றினமோ இத்தெய்வத்தைப்பெறவே
நற்றவத்தோர்க்கே யருளும் நல்லவருளுறவே [வா]
அதிகமாகுதே யென்செய்வோம் அச்சுதன்மேலாசை
கதிவேறில்லை ஆகையினால் கிட்டிச்செய்குவாய் பூசை [வா]
கோலதன்மேலே கண்வளருங் கோபாலனேடி
ஆலிலைமேலும் துயிலும் ஆதிப்பரமனேடி [வா]
உண்டுபண்ணும் அண்டர்கோவைக் கண்டழைத்துவாடி
தொண்டுபுரிவார் நமக்குத் துணைசெய்ய நீபோடி [வா]
|
|