மாவருள்முகுந்தா நின்

   

நாதநாமக்ரிய இராகம்
ஆதி தாளம்

கீழே *இந்த அடையாள முள்ளவையெல்லாம்
இரண்டுமுறை பாடவேண்டும்

பல்லவி

மாவருள்முகுந்தா நின் மலரடி நம்பிய
மாதரைக் கைவிடலாமோ   ஆயர் மாதரைக்

அநுபல்லவி

* கோவர் தனந்தனா லாபத்துதீர்த்த உனைக்
கூடாமல்நாம் கெடலாமோ உனைக்கூடாமல் நாம்

சரணங்கள்

வஞ்சம் செய்யாதேயெனக் கெஞ்சிப்புகழ்ந்திடு
மாதரைக் கைவிடலாமோ ஆயர்   மாதரைக்

* குஞ்சரந்தனைக்காத்த கோவலனே உனைக்
கூடாமல்நாம் கெடலாமோ உனைக்கூடாமல் நாம்

வாத்சல்யமாய்ச் சதா வாழ்த்திப்புகழ்ந்திடு
மாதரைக் கைவிடலாமோ ஆயர்   மாதரைக்

* கூற்றுவன் தனைச்செற்றோன் கொண்டாடும் உன் தனைக்
கூடாமல்நாம் கெடலாமோ உனைக்கூடாமல் நாம்   மாவருள்

மாறாவின்பந் தர வாறாயென்றோதிடு
மாதரைக் கைவிடலாமோ ஆயர்   மாதரைக்

* கூராழியுஞ் சங்குமேந்தி ரக்ஷிக்குமுனைக்
கூடாமல்நாம் கெடலாமோ உனைக்கூடாமல் நாம்   மாவருள்

மதிதயிரெல்லாம் மத்திட்டுக்கடைந்திடு
மாதரைக் கைவிடலாமோ ஆயர்   மாதரைக்

* குதூகலிப்பாயிடபம் கொண்டுகறந்த உனைக்
கூடாமல்நாம் கெடலாமோ உனைக்கூடாமல்   மாவருள்

மருவார் புஷ்பங்களினால் மலர்பாதம் போற்றிடு
மாதரைக் கைவிடலாமோ ஆயர் மாதரைக்

* குருவாய் அயனாதியோரைக் கொடுத்த உனைக்
கூடாமல்நாம் கெடலாமோ உனைக்கூடாமல்   மாவருள்

மானங்குலையச்செய்தும் மனத்திற்கொண்டாடிய
மாதரைக் கைவிடலாமோ ஆயர்   மாதரைக்

* கோ நடனகோபால நாதா உனைக்
கூடாமல்நாம் கெடலாமோ உனைக்கூடாமல்   மாவருள்


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube