| |
|
கோக்களைமேய்க்கும்
|
|
காம்போதி ராகம் ரூபக தாளம்
கன்னிகள்
கோக்களைமேய்க்கும் போதெல்லாம் குடைகொண்டு பிடிப்போமே
ஆக்களைமேய்க்கும் போதழகாய் வெண்ணெய்யளிப்போமே [கோ]
திருமேனிவாழவொட்டாமல் செய்வோதே கைங்கரியம்
திருவடிநோகச்சென்றானே செய்வதெங்கு கைங்கர்யம் [கோ]
திருவுளமுவப்பச் சீனித்தேம்பால் சமர்ப்பித்தோமே
திருவுளத்துக்கென்னமோ நாம்தீங்கு செயப்பெற்றோமே [கோ]
இடிவிழாதோ என்சிரமேல் ஏனோஇருக்கின்றேன்
படிக்குச்சுமை அல்லவோ நான் பாவியேனிருக்கின்றேன் [கோ]
என்னசுகம் இவ்வுடலுடனேயிருந்திங்கே
என்னிருகண் ஆற்றிலே விளையாடுகிறானிங்கே [கோ]
கண்ணீர் வருவதெல்லாம் கண்ணனுக்களிபோடி
எண்ணிப் பாடியாடுவோமடி எழுந்திருப்பாய் நாடி [கோ]
பாடியாடும் அன்பர்வினை பறக்கடிப்பவன் தோழி
தேடிப்பிடித்துத் திருவடிகொடுப்பவன் தோழி [கோ]
திருப்பவளமேபவளம் ஜெகத்திலிணையுண்டோ
திருவாயமுதம் சீனித்தேன் நல்ல கற்கண்டோ [கோ]
அமுதவாயின் தேன்பருகாது அல்லல் போமோடி
எமனிவனே யெரிக்கிறானீதென்ன காலமோடி [கோ]
பக்தவத்சலனெனும் பேர்பலித்த தெவ்விதமோ
முத்தர்பலன்பெற்றது முகுந்தன்பா லிவ்விதமோ [கோ]
|
|