| |
|
கரையேற்றுவதாரிங்கே
|
|
செஞ்சுருட்டி ராகம் ரூபக தாளம்
கண்ணிகள்
கரையேற்றுவதாரிங்கே நீ கைகொடுத்தாயன்னே
உரை கேளானோ அரவணை யோனுக்குப் பலனென்னே [க]
எடுத்துவைத்துக்கொடுப்பேனடி அடுக்குமுறி வெண்ணெய்
கெடுத்துவிட்டுப்போகலாமோ கேசவன் தானென்னை [க]
துரைராஜகோபாலன்மேல் தோஷம் சொலலாகா
நிரைபு கலப்போக வென்பாவம் நிலமேலாகா [க]
கதிரவன்முன்பாயிருளைக் காணலாமோ தோழி
அதிமோ கநம்செய்தான் திருவுளமறியேன் வாழி [க]
அறிந் தவனாயிருந்தும் என்னை பிரிந்திடல் நீதமோ
செறிந்தரியை அணைத்துக்கொண்டு சென்றவற்போதமோ [க]
போதனைக்குள்ளாயிவனும் போகலாமோ கேளே
பாதகத்தியாரோயிங்கே பழிகொள வந்தாளே [க]
தீ தளிக்கும் பா தகச்சொல் செப்பினேனே தோழி
யா தவனெல்லாருக்குமே ஆதரிப்பவன் வாயி [க]
இல்லங்கள்தோறு மிருந்தின்பம் தரவிலையோ நம்ம
செல்வச்சுவாமி அதுபோல செய்திடமலையோ [க]
என்னைப்போல் இச்சைகொள்வார் எத்தனை நங்கை மாரோ
அன்னமான ஆண்மகனைவிட்டால் நமக்காரோ [க]
தெரிவையர்க்கரியைவிடப் புருஷனும் வேறுண்டோ
நெறி அறிவாரோ அந்நியரைப் புருஷனெனக்கொண்டோர் [க]
|
|