| |
|
கண்ணனைக்காணாத
|
|
சாரங்கா இராகம் ஆதி தாளம்
கண்ணிகள்
கண்ணனைக்காணாத வென்றன் கண்களிருந்தென்னே
எண்ணமெல்லாம் உன்றன்மீ திலென்று சொன்னான் முன்னே [க]
காலைப்பிடித்தே வருடாக் கைகளிருந்தென்னே
வேலைக்கடைந்தவிழ்தம் விண்ணோர்க் கீய்ந்தோனெனச் சொன்னோன்[க]
கலைக்கச்சுநெகிழ்பானேடி கார்வரையெடுத்தகையால்
தலைவிதியோ அலைந்தலுத்தோம் தாரணியில்மெய்யால் [க]
கட்டப்பட விட்டுவிட்டானே காசினியின்மீது
இட்டதெய்வமாயிருந்தானே வீதென்ன சூது [க]
ஏனோவெம்மைப் பிரிந்தானையோ இதற்கென்ன நாம் செய்வோம்
ஸ்ரீஜானகிராமகிருஷ்ணனைச் சார்ந்தாலல்லோ வுய்வோம் [க]
வாயமுதத்துக்குநிகர் வானமிர் தமாமோ அவன்
வாயதனால்பொய்மை சொன்னால் வலியபா வம்போமோ [க]
சேவடிவைத்தே சென்ற சிங்காரத்தடமேகாய்
பாவனமாய்ப்போமோ ஜென்மம் ஆவல்தீரும்தோகாய் [க]
மீனுருவான திருவேங்கடேசனைப் பாராய்
கானகத்தில் மானைபெய்த காகுத்தனைப் பாராய் [க]
கறவைகளைமேய்த்துக் கறக்குங் கண்ணனைப் பாராய்
துறவர் குலம்தொழுது பணிதூயவனைப் பாராய் [க]
வெண்ணெய் தயிர்பால் திருடும் வித்தகனைப் பாராய்
கண்ணைவிட்டு நீங்கவிலை யென்கந்தனை நீபாராய் [க]
|
|