ஜீவாத்மகோடிகளெல்லாம்

   

எதுகுலக காம்போதி இராகம்
ஆதி தாளம்

கண்ணிகள்

ஜீவாத்மகோடிகளெல்லாம் ஸ்திரிப்பிராயமென் றறிவாய்
தேவர்களைப்படைத்த அயன் ஜெனனவிடந்தெரிவாய்   [ஜீ]

பரிமளத்ரவ்யம்கொள் ளெனப்படாதேடி நங்காய்
பரிமளத்திருமேனியைப் பாராயடியிங்கார்   [ஜீ]

அன்னம் அலர் அப்படைக்கா யாதியெல்லாம் அவனே
என்னளவோ அன்புசெயும் யார்க்குமீ தருள்பவனே   [ஜீ]

கொங்கை செங்கைகள் அலங்காரம் குறைந்துபோச்சே
மங்களுக்கிருப்பிடமான மாயனாச்சே   [ஜீ]

மூச்செறியலாச்சுதேடி முகுந்தனை நினைத்து
காட்சிகொடுக்க வருவானோ கண்ணன் நினைத்து   [ஜீ]

பிழைக்க வருவானோ வெம்பெருமானெனன்பாலோடி
வளைத்துவிடாதெனை மயக்கி வஞ்சம் செய்தானேடி   [ஜீ]

உபயபிரஷ்டமானால் உலகோர்கள் நகைப்பாரே
அபயஸ்தம் கொடுக்கவருவானோ அடியார்க்காரே   [ஜீ]

நோக்கங்களால் அகப்படுத்தும் நுண்ணறிவுடையோன்
காக்கவருவானோ கன்றுமேய்த்திடும் கோலுடையோன்   [ஜீ]

உச்சிக்கொண்டையுடையோன் ஒய்யாரநடையுடையோன்
பட்சிவாகனமுடையோன் பாற்கடலுடையோன்  [ஜீ]

அலங்கார நயனன் அடியாள்ஸ்தனமேல் சயனன்
அலரதனால் அகிலங்களாக்கும் அநந்தசயனன்  [ஜீ]


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube