* என்ன சொல்லியும் எள்ளளவேனும்

   

சோகவராளி இராகம்
ஆதி தாளம்

கீழே * இந்த அடையாளமுள்ளவையெல்லாம்
இரண்டுமுறை பாட வேண்டும்

கண்ணிகள்

* என்ன சொல்லியும் எள்ளளவேனும் நெஞ்சிரக்கம்
இல்லாதேகினதென்னோ கிருஷ்ணா எம்மேலிரக்கம்
இல்லாதேகினதென்னோ கிருஷ்ணா

* உன்னதமாகிய பன்னகசயனவோ
மன்னித்தருள்வாய் அரி கிருஷ்ணா ஏதம் மன்னித்

* கன்னலனைய எங்கள் மன்னவனே உன்தன்
காலைப்பிடிக்கின்றோங் காண் கிருஷ்ணா உன்தன் காலைப்

* இன்னமும் என்னசெய்வோம் பொன்னகர்வாசிகள்
ஏத்தித்துதிகள் செயும் கிருஷ்ணா நாளும் ஏத்தித்

* இரட்சிப்பவன் நீயென்று எச்சகத்துள்ளோர்களும்
இயம்புகின்றது பொய்யோ கிருஷ்ணா உன்னை   (இ)

* வரவுபார்த்திரவினில் மரபே உன்தனைக்கூடி
வாழ்ந்த நங்கையரலவோ கிருஷ்ணா ஓ   (வர)

* கர கமலங்களால் பரவசமாகவே
கட்டியணைத்திட்டாய் கிருஷ்ணா எம்மை   (க)

* நரஹரியே உன்தன் சரணமரையுற்றோம்
நடனகோபாலாவோ கிருஷ்ணா எங்கள்   (க)


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube