| |
|
எங்கே போனானோ கண்ணன்
|
|
செஞ்சுருட்டி ராகம் ஆதி தாளம்
பல்லவி
எங்கே போனானோ கண்ணன்
என்ன செய்வோம் தோழி [எங்கே]
அநுபல்லவி
உங்களை விட்டெங்கும் போகிலேன் நானென்று
எங்களிடத்திலன்பா யியம்பிய கோபாலன் [எ]
சரணங்கள்
கணநேரமும் எம்மை விட்டுப்பிரியாத
மனமுடையோன் யாங்கள் மயங்கவிட்டேயின்று [எ]
மங்கையர்கள் கர்ம சங்கடந்தீர்க்கும்
தங்கமேனியனான யெங்கள் ஸ்ரீ கோபாலன் [எ]
காதலின்படி நம்பால் பேதமின் றிச்சேர்
மாதவகோபாலன் பாதமலர்கள் நோவ [எ]
வெண்ணெய்தயிர்பால் உண்ணுவோனாகி நம்
எண்ணங்கவர்ந்த மணி வண்ணன் ஸ்ரீ கோபாலன் [எ]
கொங்கைகள்மேல்பரி மளம்பொங்கப்பூசும்
நங்கையர்கள் சூழும் நடன ஸ்ரீ கோபாலன் [எ]
|
|