ஏகாந்தத்தில் மோகலீலை

   

எமுநாகல்யாணி இராகம்
ரூபக தாளம்

கண்ணிகள்

ஏகாந்தத்தில் மோகலீலை எண்ணின்றிச் செய்தானே
ஏகாந்தலீலையெல்லாம் எண்ணியழச் செய்தானே (கண்ணன்)

புண்ணாய்மனம் நோகுதே போகுமோ துயர் தோழி
எண்ணாமற் செய்தானே ஏகுமோ துயர் தோழி   [ஏ]

வந்தென்முகத்தோடே முகம்வைத்து வாழ்விப்பானோ
தந்தவின்பங்கள் போலின்னம்தந்து வாழ்விப்பானோ   [ஏ]

நினைப்பவர் மனக்கிலேசங்கள் நீக்கிடுவோனேடி
நினைந்தாடிப்பாடியழுதும் இங்குவரக்காணோமேடி   [ஏ]

கண்ணனைப்போல் கல்மனத்தோர் காசினிமேலுண்டோ
எண்ணியயெண்ணம்போல் செய்திடுவா னெங்கள்விண்டோ  [ஏ]

கன்றுகளிடத்திலும் கருணை காணோமேடி
அன்றுகன்று பாலர்பசுக்க ளானவனேடி   [ஏ]

பின்னாலேயோடிப் பிழைக்கும் பெற்றங்கள்வாடுதே
என்னாலே என்னமுடியும் என்மனந் தேடுதே   [ஏ]

நள்ளிருள் போகாமலே நம்மை வாட்டுதேயிங்ஙன்
எள்ளெண்ணெய்போலிருப்பவ னென் றியம்பிடுவதெங்ஙன்   [ஏ]

இரவுபக லானாலும் இத்துன்பம் போமோடி
பரமபுருஷன் கொடுத்த பாக்கிய மீதோடி   [ஏ]

நித்தியமுத்தர்கள் துதிசெயும் நித்தியனேடி
சத்திய சங்கல்ப சங்க சக்கிரபாணியனேடி   [ஏ]


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube