| |
|
எங்களாலென்னசெயக் கூடுமடி
|
|
முகாரி ராகம் ரூபக தாளம்
கண்ணிகள்
எங்களாலென்னசெயக் கூடுமடியிங்கிப்போது
மங்களமாகவிருந்த மா ல்வருவதெப்போது (கண்ணன்)
எள்ளளவேனும்கிருபை எம்மேல்வைத்துப்பாராய்
கொள்ளைகொண்டவனிடம் போய்குணமாயிவைகூறாய் [எ]
பாலைக்குடியாமலே கன்றுகளும்பார்க்குதே
வேலைவண்ணனைச்சேவிக்கமேல் விழிகளும் நோக்குதே [எ]
கன்றுகளுக்குமிரங்கானோ கல்நெஞ்சக்கண்ணன்
அன்றுமுதலின்றளவும் அவன்மேலே நம்எண்ணம் [எ]
அம்மாவெனக்கூவுதடி அய்யோவிக்கன்றுகள்
எம்மாலேஎன்னமுடியும் என்செய்வோம் நீபோய்வின் [எ]
பாடியெல்லாம்வாடிப் பரதவிக்கின் றதுபாராய்
ஓடிப்போய்கண்டுளமிரங்கும் படியுரைத்துவாராய் [எ]
வரவைக்கண்டுமகிழ்வுகொண்டு வாமனன் கைபிடிக்க
நரஹரி ஸ்ரீநாரணசற் பாசுரங்கள் படிக்க [எ]
பாடியகமுருகிப்பரந் தாமா வென்றழைக்க
நாடிநம்மைத்தழுவ வவன்கூடயெல்லீரும் தழைக்க [எ]
நடயழகைக்கண்டுநா மெல்லோரும் நடனஞ்செய்ய
புடவையெடுத்தகையன் இப்பொல்லாவினைகொய்ய [எ]
செந்தாமரைச்சேவடிகள் சேயிழையார்நோக்க
வந்தாயர்பெண்டுகள் விசனமதைப்போக்க [எ]
|
|