சிக்கிக்கொண்டான் வாரீர் எங்கள்

   

நாதநாமக்ரியா இராகம்
ரூபக தாளம்

பல்லவி

சிக்கிக்கொண்டான் வாரீர் எங்கள்
ஸ்ரீ வேணுகோபாலன்   [சி]

அநுபல்லவி

முக்கிமாய்த் தேடினதால்
மோசக்கருத்தைவிட் டெம்மிடத்தில்   [சி]

சரணங்கள்

நாளோர்யுகமாகவல்லோ நாம் கழித்தோம் தோழி
ஆள்வதற்குக் கிடைத்ததினால் ஆனந்தித்து கொண்டாடுங்கடி[சி]

என்னதவ மியற்றினோமோ இவன்தனை நாமடைய
மன்னமன்ன மா தவனை மன்னுவதற் கிதுசமயம்   [சி]

விட்டாலினி கிட்டுவானோ மேதினிதன்மீதே
பட்டாபிராமகிருஷ்ணனைக் கட்டிகக்கொண்டானந்தமுற  [சி]

வெண்ணெயொடு பாற்கனியும் வேகமாகக் கொண்டுவாரீர்
கண்ணபிரான்பசியார வுண்ணவே நாம்கொடுப்போம் தோழி  [சி]

ஆபரணங்களுக்கழகு அளிக்குமற்புத ரூபன்
பாபவிமோசனமாமிப்போ பதம்சிரமேல் படப்பணியும்  [சி]

பவமதுநா மெடுத்ததற்குப் பலித்ததின்று லாபம்
தவவிதியா திதேவர்கள் கவனத்துக்குஞ் சிக்காதோன்[சி]

எச்சன்மத்தில் செய்கன்மமோ விங்ஙனம் பிரிந்திருந்தோம்
முச்சகமும் தொழுமாதி மூலனாகிய சீலனிவன்  [சி]

உடலுயிரும் போலவினி யுடனிருந்து காப்பான்
நடனகோபால நாயகிமாருடன் புணரும் நாராயணன்  [சி]


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube