|
|
|
|
கைங்கர்யம் கிங்கர்யம் காம்ஸாஜா மெனஸ்தெனஸ்கி
கருமு ராணுமு ஸம்டி கெஷ்டம் பொந்தி3லேது ரா:ன்
கைங்கர்யமுஸ் கத்கொ கருமுராணு கடிலிஜாய் அத்தொ
This section to reverend people and organization
those worked hard to bringout the fame of Sri Natanagopala Nayagi swamigal and
his keerthans to the world. Please select each section to browse through the
contents.
விப்ரபந்து ஸ்ரீ கு.வெ. பத்மனாபய்யர் (1894--1973)
'விப்ரபந்து' என்று ஸெளராஷ்டிரர்களிடையே பிரபலமானவர்.
ஸெளராஷ்டிர மொழி மகான்கள்,பிரமுகர்கள் முதலியோரின்
அருமை பெருமைகளைப் பரப்புவதே வாழ்க்கை இலட்சியமாகப்
பணியாற்றி வந்தவர். இவர் முழு நேரம் பணியாற்றிய சமூகத்
தொண்டர். இலக்கியவாதி. ஸ்ரீ நடனகோபால நாயகி சுவாமிகள்
வேங்கடசூரி சுவாமிகள் ஆகிய பக்திமான்களின் வரலாற்றைத்
தமிழில் வெளியிட்டவர். புராதன ஸெளராஷ்டிர பால
பாடம்(1946) ந:ன்னிகீதுன், நவீன ஸெளராஷ்டிர முதல் பாட
புத்தகம்(1946), ஐந்து மகான்களின் ஸெளராஷ்டிர சாகித்ய
கிருதிகள்(1939) முதலியன அச்சானவைகளில் குறிப்பிடத்தக்கவை.
வித்யாபோதினி(1920), ஸெளராஷ்டிர விப்ரபந்து (1947)
ஸெளராஷ்டிர மித்திரன்(1953) ஆகிய தமிழ்ப் பத்திரிக்கைகளின்
மூலம் ஸெளராஷ்(r)ரரிடையே நன்மதிப்பு பெற்றார். லண்டனில்
இந்தியா நூல்நிலையத் தலைவராகப் பணிபுரிந்த டாக்டர் H.N.
ராண்டேல் இவருடன் தொடர்பு கொண்டு ஸெளராஷ்டிர மொழியை
நன்கு ஆராய்ந்தார். இவர்களது கடிதங்கள், ஸெளராஷ்டிர மொழி இலக்கியம் முதலியவைப் பற்றிச்
சுவையான தகவல்களைத் தருகின்றன. அவைகள் நூல் வடிவில்
வெளியிடப் பட்டுள்ளன. (Glimpsese of the Saurashtra Language & Literature, A true
abstract of the correspondence between Dr.H.N. Randle & Sri K.V. Padmanabhaier,
1945). அநேக ஸெளராஷ்டிர இலக்கிய நூல்கள், சமூகப் பிரமுகர்களின் மணிவிழா மலர்கள் முதலியவை களைப் பதிப்பித்து தக்கோர்
ஆதரவுடன் வெளியிட்டுள்ளார். ஸெளராஷ்டிர சுகுணோதய நாடக சபையின் மூலம் ஸெளராஷ்டிர
நாடகத் துறையில் வசனம், கீர்த்தனங்கள் எழுதி தொழிலாகக் கொண்டிருந்தார். ஸெளராஷ்டிர
மகான்களின் திருவுருவங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தி அரிய சேவை செய்திருக்கிறார்.
'சித்ரஸெளளி' P.N.சுப்பய்யர் என்ற ஓவியரின் ஒத்துழைப்புடன் ஸெளராஷ்டிர சமூக மகான்களின்
ஓவியங்கள் உருவாயின. தமிழுக்கு ஒரு சாமிநாதய்யர் என்றால் ஸெளராஷ்டிர மொழிக்கு ஒரு
பத்மனாபய்யர். நமது மத்திய அரசு இவருடைய கலாசாரப் பணியைப் பாராட்டி ரூபாய் 2000/-
அளித்தது தமது இறுதி மூச்சு வரை தமது சமூகத்துக்காகவே வாழ்ந்து மங்காப் புகழ் பெற்றார்.
சுவாமிகளின்
இனிய வாழ்க்கை வரலாற்றை எழுத்தில் வடித்துப் பலர் பணி புரிந்துள்ளனர். தமிழில் முதன்
முதலில் ஸ்ரீ நடனகோபால சுவாமி சரித்திரம் (1936,1938, 1949) மூன்று பதிப்புகள்
வெளியிடப்பட்டன.இதற்குக் காரணமான திரு. கு.வெ. பத்மநாபய்யரின் தொண்டு
பாராட்டத்தக்கது. ' ஸ்ரீ நடனகோபால சுவாமி க்ருதின் 'என்ற தலைப்பில் சுவாமிகளின்
பாடல்கள்,சுவாமிகளின் நூற்றாண்டு விழா நினைவு வெளியீடாக 1944ல் திரு
பத்மநாபய்யரால் வெளியிடப்பட்டது.
(ஸ்ரீ கே.ஆர். சேதுராமனின் தமிழ் நாட்டில் சௌராஷ்டிரர்: முழு வரலாறு பக்கம் 132-133 & 146,
147 லிருந்து) நன்றி K.R.சேதுராமன்
|
|